விபத்தில் இளைஞர் பலி
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் மகாசக்தி நகர் கலையரசன் 22. நண்பர்கள் இருவருடன் நேற்று முன்தினம் மாலை மதுரை--ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். குறுக்கே மாடு வந்ததால் விழுந்ததில் கலையரசன் காயம் அடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொண்டு வந்த போது உயிரிழந்தார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.