தண்ணீர் வாளியில் மூழ்கி குழந்தை பலி
ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டம், எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி சிவக்குமார், 43. இவரது ஒரு வயது குழந்தை தினேஷ். நேற்று முன்தினம் மாலை தினேஷ் வீட்டின் அருகே விளையாடியபோது, அருகே நீர்நிரம்பி இருந்த வாளியில் குழந்தை தலைகுப்புற கவிழ்ந்ததில், நீரில் மூழ்கி குழந்தை பலியானது. ராணிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.