உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / சோளிங்கர் ரோப்கார் சேவை சனி, ஞாயிறில் நேரம் அதிகரிப்பு

சோளிங்கர் ரோப்கார் சேவை சனி, ஞாயிறில் நேரம் அதிகரிப்பு

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்மர் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோவிலுக்கு கிழக்கில், சின்ன மலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார். பெரிய மலையில் அருள்பாலிக்கு நரசிம்ம சுவாமி கோவிலுக்கு, 1,305 படிகள் கொண்ட பாதை உள்ளது. இந்நிலையில், கூடுதலாக, ரோப்கார் வசதி கடந்த மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. தினசரி ஆயிரம் பக்தர்கள் வரை ரோப்கார் வாயிலாக மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பக்தர்கள் ரோப்கார் வாயிலாக பயணித்து வருகின்றனர்.இன்று புரட்டாசி சனி மற்றும் ஞாயிறு மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ரோப்கார் சேவை செயல்படும், என, அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை