உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / லாரி மீது பைக் மோதி மாணவர்கள் பலி

லாரி மீது பைக் மோதி மாணவர்கள் பலி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரத்தை சேர்ந்தவர் முகமது தலாக், 17; தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு படித்தார். இவரது நண்பர் பயாஸ், 16; பிளஸ் 1 படித்து வந்தார்.இருவரும், 'பஜாஜ்' பைக்கில் வேலுார் நோக்கி நேற்று காலை, 8:00 மணியளவில் சென்றனர். கிரீன் சர்க்கிள் அருகே சென்னை - பெங்களூரு சாலையில் சென்றபோது, பைக் நிலை தடுமாறி, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியது.இதில், முகமது தலாக் சம்பவ இடத்திலேயே பலியானார். பயாஸ் வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ