உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்கம்பம், மரங்களில் அனுமதியற்ற விளம்பர பதாகைகள்அபராதம் விதிக்குமா மாநகராட்சி?

மின்கம்பம், மரங்களில் அனுமதியற்ற விளம்பர பதாகைகள்அபராதம் விதிக்குமா மாநகராட்சி?

மின்கம்பம், மரங்களில் அனுமதியற்ற விளம்பர பதாகைகள்அபராதம் விதிக்குமா மாநகராட்சி?சேலம், : சேலம் மாநகரின் சாலையோரங்களில் உள்ள மின் கம்பம், மரங்களில், அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைப்பது அதிகரித்து வருவதால், உடனே அகற்றுவதோடு, அந்நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தின் பிரதான சாலையோரங்களில் வைக்கப்படும் விளம்பர பலகைகளால், பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு உள்ளிட்ட சேதங்கள் ஏற்பட்டுள்ளன.இதனால் நீதிமன்றம், அனுமதியின்றி வைக்கப்படும் பலகைகளை உடனே அகற்ற, பலமுறை உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களின் எண்ணிக்கை குறையவில்லை.இந்நிலையில் சேலம் மாநகராட்சியின் பிரதான சாலைகளில் உள்ள மின் கம்பம், மரங்கள் உள்ளிட்ட அனைத்திலும், 3க்கு, 2 அடி முதல், 1க்கு, 1 சதுரடி வரை, பலதரப்பட்ட விளம்பர பதாகைகளை, ஆணி அடித்தோ, கம்பி வைத்து கட்டியோ வைத்துள்ளனர். அனுமதியின்றி வைக்கப்படும் பதாகைகளை, சமீப காலமாக அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் ஒவ்வொரு கம்பத்திலும் பல விளம்பர பதாகைகள் வரிசை கட்டி தொங்குகின்றன. கட்டப்பட்டுள்ள கம்பி அறுந்து சாலைகளில் விழுந்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.இதுகுறித்து மாநகராட்சி பணியாளர்கள் கூறியதாவது:முக்கிய இடங்களில் அனுமதி வாங்கி வைக்கப்படும் விளம்பர பேனர்களுக்கு, பல லட்சம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. இதனால் பல தனியார் நிறுவனங்கள் குறுக்கு வழியை நாடுகின்றன. பாலிதீன் அட்டைகளில் தயாரிக்கப்படும் விளம்பர பதாகைகளின் செலவும் மிக குறைவு. இதை ஆயிரக்கணக்கில் அச்சடித்து, ஆட்களை வைத்து, தற்காலிகமாக மரங்களில் கட்டி விடுகின்றனர்.இவற்றை உடனே அகற்றாமல் இருக்க, அந்தந்த பகுதி மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்களை, 'கவனித்து' விடுகின்றனர். இதனால் அகற்றப்படாமல் மாதக்கணக்கில் உள்ளன. அப்படியே கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அகற்ற உத்தரவிட்டாலும், நீண்ட நாட்களுக்கு பின் அகற்றுவதில் பலனில்லை. அவற்றை கம்பங்களில் கட்டிய உடனே அகற்றுவதோடு, அந்நிறுவனத்துக்கு அபராதம் விதித்தால் மட்டுமே, சாலையோரங்களில் வைக்கப்படும் விளம்பர பதாகைகளை தடை செய்ய முடியும். மேலும் எளிதில் மட்காத இந்த பிளாஸ்டிக் அட்டைகளால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன், சேலம் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை