உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வு அரசு ஊழியர் வீட்டில் பட்டப்பகலில் 52 பவுன் திருட்டு

ஓய்வு அரசு ஊழியர் வீட்டில் பட்டப்பகலில் 52 பவுன் திருட்டு

சங்ககிரி: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில், 52 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நட்டுவம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, 61. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அலுவலக உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.இவரது மனைவி கன்னியாகுமரி. இவர்களது மகன் வசந்தமோகன், மருமகள் நிதிஷா. இவர்களுக்கு, 9 மாத குழந்தை உள்ளது. வசந்தமோகன், சென்னையில் பணிபுரிகிறார். தற்போது அவர், வீட்டில் இருந்து பணிகளை செய்கிறார். பொங்கல் பண்டிகையால், 5 நாட்களுக்கு முன், வசந்தமோகன், மனைவி, குழந்தையுடன், மாமனார் வீட்டுக்கு சென்றார்.இந்நிலையில் வீட்டில் சுப்ரமணி, கன்னியாகுமரி மட்டும் இருந்தனர். இவர்கள், நேற்று முன்தினம் காலை, அவர்களது நிலத்துக்கு சென்று, விவசாய பணிகளை செய்துவிட்டு, மாலை, 6:30 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த, 52 பவுன் நகைகளை, மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. சுப்ரமணி புகார்படி, சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர். சேலம் எஸ்.பி., கவுதம்கோயல், சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. நட்டுவம்பாளையத்தில் இருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, நாகிசெட்டிப்பட்டி செல்லும் வழிகளில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கைப்பற்றி, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ வீட்டுக்கு சற்று தொலைவில், சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன் உள்ளதால், ரயிலில் திருடர்கள் தப்பினரா என்றும், போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி