சரக்கு ரயிலில் அடிபட்டுலாரி கிளீனர் உயிரிழப்பு
சரக்கு ரயிலில் அடிபட்டுலாரி கிளீனர் உயிரிழப்புமேட்டூர்:மேட்டூர், ராமன் நகர், இரட்டைபுளியமரத்துாரை சேர்ந்த லாரி கிளீனர் பரமசிவம், 55. நேற்று முன்தினம் இரவு, 11:35 மணிக்கு, அதே பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே, இயற்கை உபாதைக்கு சென்றார். பின் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இருந்து வந்த சரக்கு ரயில், பரமசிவம் மீது மோதியது. இதில் பரமசிவம் இடுப்பு, கால்கள் உள்ளிட்ட பாகங்கள் துண்டாகி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.