ரூ.2.75 கோடிக்கு ஆடுகள் விற்பனை
இடைப்பாடி: சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஆட்டுச்சந்தைக்கு, 4,050 ஆடுகளை, விவசாயிகள், வியாபாரிகள், நேற்று விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ ஆடு, 7,600 முதல், 8,050 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 2.75 கோடி ரூபாய்க்கு விற்-பனை நடந்தது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம், 200 ஆடுகள் அதிகமாக கொண்டு வரப்பட்டதாக, வியாபாரிகள் தெரி-வித்தனர்.