உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகையிலை பறிமுதல்வடமாநில நபர் கைது

புகையிலை பறிமுதல்வடமாநில நபர் கைது

குமாரபாளையம்:குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த, 'மாருதி சுவிப்ட்' காரை நிறுத்தி சோதனையிட்டபோது, ஒரு லட்சத்து, 72,000 ரூபாய் மதிப்புள்ள, 266 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. காரை பறிமுதல் செய்தனர். மேலும், காரை ஓட்டி வந்த, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டம், பெட்டாலா பகுதியை சேர்ந்த ஹர்ஷன்குமார், 25, என்ற வாலிபரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி