நாய்கள் கடித்து பசு மாடு பலி
நாய்கள் கடித்து பசு மாடு பலிசேலம்:சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, குப்தா நகரை சேர்ந்தவர் மீனா, 55. இவர், 6 பசு மாடுகளை பராமரித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஒரு பசுமாட்டை நாய்கள் கடித்து குதறின. இதில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டு இறந்து கிடந்தது. மீனா கதறி அழுதார். கால்நடைத்துறை அலுவலர்கள் விசாரித்தனர்.இதுகுறித்து மீனா கூறுகையில், ''மாடுகளை வைத்து பிழைப்பு நடத்துகிறேன். இப்பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளன. பலமுறை பசுவை கடிக்க வரும் நாய்களை விரட்டியுள்ளேன். ஆனால் ,தற்போது கடித்தது தெரியாமல் போய்விட்டது. மாடு இறந்து கிடந்ததை, காலையில்தான் பார்த்தேன்,'' என்றார்.