மாணவியிடம் சீண்டல்தாய்மாமன் கைது
ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துாரை சேர்ந்த, 13 வயது சிறுமி, 7ம் வகுப்பு படிக்கிறார். அவர், தாத்தா வீட்டுக்கு சென்றபோது, அவரது தாய்மாமனான, 47 வயதுடைய சவரத்தொழிலாளி, பாலியல் தொந்தரவு செய்து வந்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், ஆத்துார் மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். விசாரித்த போலீசார், 'போக்சோ' வழக்குப்பதிந்து, தொழிலாளியை நேற்று கைது செய்தனர்.