உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓடும் ரயிலில் இருந்துவிழுந்தவர் படுகாயம்

ஓடும் ரயிலில் இருந்துவிழுந்தவர் படுகாயம்

ஓடும் ரயிலில் இருந்துவிழுந்தவர் படுகாயம்சேலம்:ஓமலுார், தின்னப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே, நேற்று முன்தினம் இரவு, டாடா நகர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது பொது பெட்டியில் பயணித்த ஒருவர் தவறி விழுந்தார். சக பயணியர் தகவல்படி, சேலம் ரயில்வே போலீசார், விரைந்து சென்று அவரை மீட்டபோது, பலத்த காயம் அடைந்ததில் சுயநினைவின்றி இருந்தார். அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரிக்கின்றனர். அவர் குறித்த தகவல் குறித்து யாருக்கும் தெரிந்தால், 94981 26757, 94981 01973 என்ற எண்களில் அழைக்கலாம் என, ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி