உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓட்டுப்போடுவதன் அவசியம் மாணவர்கள் விழிப்புணர்வு

ஓட்டுப்போடுவதன் அவசியம் மாணவர்கள் விழிப்புணர்வு

ஏற்காடு:சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஏற்காடு, காந்தி பூங்கா அருகே நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாசில்தார் செல்வராஜ் தலைமை வகித்தார். அதில் சேலம் பெரியார் பல்கலை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், ஓட்டுப்போடுவதன் அவசியம் குறித்து, கோஷம் எழுப்பியபடி சென்றனர். கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் வழியே சென்ற பேரணி, ஒண்டிக்கடையில் நிறைவடைந்தது. தேர்தல் தாசில்தார் சர்மிளா பானு, துணை தாசில்தார் மாதவன், கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ