வாலிபர் சாவில் சந்தேகம் உறவினர்கள் சாலை மறியல்
பாலக்கோடு: மின்வேலியில் சிக்கி பலியான வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் ஓசூர் - தர்மபுரி நெடுஞ்சா-லையில் மறியலில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த, வீரன்கொட்டாயை சேர்ந்தவர் பிரபு, 25; இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர், நேற்று முன்தினம் காலை அதே பகுதியிலுள்ள கண்ணப்பன் என்பவரின் கரும்பு தோட்டம் வழி-யாக சென்றபோது, காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி பலியானார். மகேந்திரமங்-கலம் போலீசார், தலைமறைவான கண்ணப்-பனை தேடி வந்தனர்.இந்நிலையில், பிரபுவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள், 100க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம், 12:30 மணிக்கு ஓசூர் - தர்மபுரி நெடுஞ்சாலையில், மகேந்திரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலில் ஈடுபட்டனர். பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன் மற்றும் டி.எஸ்.பி., ராஜேஷ், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் மறி-யலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து, 5 பேரை பிடித்து விசா-ரித்து வருவதாகவும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்-ததால், சாலை மறியல் கைவிடப்பட்டது.