உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவியரிடம் பேட் டச் ஓவிய ஆசிரியர் கைது

மாணவியரிடம் பேட் டச் ஓவிய ஆசிரியர் கைது

சேலம்: சேலம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும், 3 மாணவியரிடம், அப்பள்ளி ஓவிய ஆசிரியர், 'பேட் டச்' மூலம் பேசுவதாக, பெற்றோர் தரப்பில், கொண்டலாம்பட்டி மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து நேற்று முன்தினம் பள்ளியில் போலீசார் விசாரித்-தனர். அதில் சேலம், மணக்காட்டை சேர்ந்த ஓவிய ஆசிரியர் சீனி-வாசன், 58, அவரது வகுப்பின்போது தவறான எண்ணத்துடன் மாணவியரை தொட்டு பேசியது தெரிந்தது. இதனால், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.இதையடுத்து, அப்பள்ளி ஆசிரியர்கள், கொண்டலாம்பட்டி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்தனர். அதில், '21 மதியம், 2:00 மணிக்கு, 8ம் வகுப்பு மாணவியர், 3 பேர் அளித்த புகாரில், சீனிவாசன் மீது நடவடிக்கை எடுத்து காவலில் வைக்கப்-பட்டுள்ளார். அந்த வகுப்பில், 5ம் பாட வேளையில் இருந்த மற்ற மாணவர்களிடமும் விசாரித்து, உண்மை நிலையை அறிந்த பின் நடவடிக்கை மேற்கொள்ளும்படி, அனைத்து ஆசிரியர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ