உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

ஆத்துார்: ஆத்துார் அருகே கோபாலபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆவணி தேர் திருவிழா கடந்த ஆக., 20ல் சக்தி அழைத்தலுடன் தொடங்கியது. நேற்று மதியம், 2:00 மணிக்கு, தேரில் சுவாமியை வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து மேளதாளம் முழங்க, திரளான பக்தர்கள் வடம்பிடித்து, முக்கிய வீதிகள் வழியே, தேரை இழுத்து வந்தனர். மாலை, 5:00 மணிக்கு தேர் கோவிலை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ