உள்ளூர் செய்திகள்

2 ஆடுகள் பலி

இடைப்பாடி, ஜன. 4-தேவூர் அருகே கோனேரிப்பட்டி ஊராட்சி பாலிருச்சம்பாளையத்தை சேர்ந்த, விவசாயி பழனிசாமி, 47. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீடு முன்புறம், 6 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். நேற்று காலை பார்த்தபோது, 6 ஆடுகளையும் மர்ம விலங்கு கடித்திருந்தது. 2 ஆடுகள் இறந்திருந்தன. கால்நடை மருத்துவர் கண்ணன், காயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். ஆடுகளை கடித்தது மர்ம விலங்கா, வெறிநாயா என, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி