வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு சீல்
ஆத்துார்: ஆத்துார் நகராட்சியில் வாடகை கட்டாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க, அதன் கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் உத்தரவிட்டார். அதன்படி நேற்று நகராட்சி வருவாய் அலுவலர் நாகராஜ் உள்ளிட்டோர், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக பகுதியில் ஆய்வு செய்த, வாடகை செலுத்தாத, இரு கடைகளுக்கு, 'சீல்' வைத்தனர்.