உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

இடைப்பாடி : இடைப்பாடியில் மின்சார வாரிய கோட்ட அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (3ம் தேதி) நடைபெறுகிறது. இது குறித்து, இடைப்பாடி மின்வாரிய கோட்ட பொறியாளர் தமிழ்மணி விடுத்துள்ள அறிக்கை: இடைப்பாடி கோட்ட மின் வாரியத்தின் சார்பில், மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் கோட்ட மின்வாரிய அலுவலக வளாகத்தில் நாளை பகல், 11:00 முதல் 1:00 மணி வரை நடைபெற உள்ளது.இடைப்பாடி, ஜலகண்டபுரம், சித்துார், பூலாம்பட்டி, கோனேரிப்-பட்டி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள், மின்சாரம் சம்மந்தமான குறைகளை தெரிவிக்-கலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை