10 பவுன் மாயம்
மேட்டூர்:மேட்டூர், கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி மேல்காட்டூரை சேர்ந்தவர் அண்ணாதுரை, 47. டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள், 42. இவர்களுக்கு இரு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த மாதம், 26ல் பீரோவில் இருந்த, 6 மற்றும் 4 பவுன் கொண்ட, இரு தங்க சங்கிலிகளை மட்டும் காணவில்லை. அதன் மதிப்பு, 1.85 லட்சம் ரூபாய். அதேநேரம் மற்ற சங்கிலிகள் இருந்தன. நேற்று அண்ணாதுரை புகார்படி, மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.