உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 12 டன் புகையிலை அழிப்பு

12 டன் புகையிலை அழிப்பு

சேலம், கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்கள், சேலம் வழியே பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்படுகின்றன.இதை போலீசார் கண்காணித்து, பறிமுதல் செய்கின்றனர். அதன்படி கடந்த, 5 ஆண்டுகளில், அன்னதானப்பட்டி போலீசார், 10 வழக்குகள் பதிந்து, 12 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்திருந்தனர். அவற்றை அழிக்க, நீதிமன்றத்தில் சமீபத்தில் அனுமதி பெற்றனர்.அதன்படி நேற்று, ஸ்டேஷனில் இருந்து, 12 டன் புகையிலை பொருட்களை, லாரிகளில் ஏற்றிச்சென்று, செட்டிச்சாவடி பகுதி களில் பள்ளம் தோண்டி கொட்டி அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை