சிறையில் 3 பேட்டரி சிக்கியது
சேலம்: சேலம் மத்திய சிறையில், 1,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று, சிறை சோதனை குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையின் கழிவறை பகுதியில், மொபைல் போன்களுக்கு பயன்படுத்தும், 3 பேட்டரி இருந்தன. அவற்றை குழுவினர் பறிமுதல் செய்தனர். பயன்படுத்தியது யார் என, சிறை போலீசார் விசாரிக்கின்றனர்.