அரிசி ஆலை ஓனர் வீட்டில் 3 கிலோ வெள்ளி திருட்டு
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையை சேர்ந்-தவர் தனபால், 50. அதே பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். இவரது மனைவி சாந்தி, நாமக்கல்லில், 'நீட்' தேர்வுக்கு மகள் படிப்பதால், அவருடன் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தனபால், அருகே உள்ள அரிசி ஆலைக்கு சென்றார். நேற்று காலை, 8:00 மணிக்கு திரும்பி வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ அருகே இருந்த சாவியை, மர்ம நபர்கள் எடுத்து, அதன் அறைகளில் இருந்த, 3 லட்சம் ரூபாய் மதிப்பில், 3 கிலோ வெள்ளி பொருட்கள், 10,000 ரூபாயை திரு-டிச்சென்றது தெரிந்தது. அவர் தகவல்படி, கெங்கவல்லி போலீசார் ஆய்வு செய்தனர்.போலீசார் கூறுகையில், ''வெளிப்புற கதவை கடப்பாரையால் உடைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்-பதிந்து மர்ம நபர்களை தேடுகிறோம்' என்றனர்.