உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லஞ்ச இன்ஸ்., உட்பட 4 போலீசார் கைது

லஞ்ச இன்ஸ்., உட்பட 4 போலீசார் கைது

சேலம்:ரேஷன் அரிசி கடத்தலை கண்டுகொள்ளாமல் இருக்க, 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு போலீசாரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இரு மாதங்களுக்கு முன், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதால், சேலம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சக்திவேலை கைது செய்தனர். ஜாமினில் வந்தவரிடம், 'அரிசி கடத்தலை கண்டுகொள்ளாமல் இருக்க, மாதந்தோறும், 15,000 ரூபாய் லஞ்சம் வேண்டும்' என, கூறியுள்ளனர். சக்திவேல், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அவர்களின் வழிகாட்டுதல்படி, ரசாயன பவுடர் தடவப்பட்ட, 15,000 ரூபாயை, கொண்டலாம்பட்டியில் வைத்து ஏட்டு ராஜலட்சுமி, 36, என்பவரிடம் நேற்று மதியம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜலட்சுமியை கையும், களவுமாக கைது செய்தனர். விசாரித்தபோது, இன்ஸ்பெக்டர் ராமராஜன், 50, எஸ்.ஐ.,க்கள் சரவணன், 37, ராமகிருஷ்ணன், 38, ஆகியோருக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ