உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீடு மேற்கூரையை பிரித்து 4.5 பவுன் நகை திருட்டு

வீடு மேற்கூரையை பிரித்து 4.5 பவுன் நகை திருட்டு

சேலம், சேலம், பஞ்சந்தாங்கி ஏரி, இந்திரா நகரை சேர்ந்த நாகராஜன் மனைவி மாரி, 26. இவர், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே மொபைல் போன் கடையில் வேலை செய்கிறார். கடந்த, 7ல் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை வந்தபோது, வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்ட நிலையில், துணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த, 4 பவுன் சங்கிலி, அரை பவுன் மோதிரம் திருடுபோனது தெரிந்தது. அதன் மதிப்பு, 1.35 லட்சம் ரூபாய். அவர் புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி