உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாய் கடித்து 5 பேர் அட்மிட்

நாய் கடித்து 5 பேர் அட்மிட்

மேட்டூர், மேட்டூர், கருமலைக்கூடல் அடுத்த ரெட்டிப்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார், 20, கருமலைக்கூடல் கோவிந்தாயி, 63, லட்சுமி, 63, ராஜேஸ்வரி, 65 ஆகியோர், நேற்று காலை கருமலைக்கூடலில் நடந்து சென்றனர். அப்போது அங்கு சுற்றி திரிந்த ஒரு தெருநாய், 4 பேரையும் கடித்தது. காயம் அடைந்த, 4 பேரும், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட்டு, மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். அதே நாய் கடித்த மேலும் ஒருவர், கோம்புரான்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை