திறனாய்வு தேர்வு 8 பேர் ஆப்சென்ட்
பனமரத்துப்பட்டி: மல்லுாரில் உள்ள பனமரத்துப்பட்டி அரசு மாதிரிப்பள்ளியில், முதல்வரின் திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. அதில் பனமரத்-துப்பட்டி, குள்ளப்பநாயக்கனுார், தாசநாயக்கன்பட்டி, நெய்க்கா-ரப்பட்டி உள்பட, 10 அரசு பள்ளிகளின், 10ம் வகுப்பை சேர்ந்த, 182 மாணவ, மாணவியர், தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டி-ருந்தது. ஆனால், 8 மாணவர்கள் வரவில்லை. மற்றவர்கள் காலை, 10:00 முதல், 12:00 மணி வரை வினாத்தாள் ஒன்று, மதியம், 2:00 முதல், 4:00 வரை, வினாத்தாள் இரண்டு தேர்வை எழுதினர்.