அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், வலசையூர் பஸ் ஸ்டாப்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் மணி தலைமை வகித்தார். சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், திறந்து வைத்து மக்களுக்கு நீர் மோர் வழங்கினார். தொடர்ந்து அயோத்தியாப்பட்-டணம் பஸ் ஸ்டாப் பகுதியில், நகர அ.தி.மு.க., சார்பில், நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலர் ராஜசே-கரன், நகர செயலர் ரவிசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலர் அருண்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.