உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாரில் தகராறு: 4 பேர் அட்மிட்

பாரில் தகராறு: 4 பேர் அட்மிட்

ஓமலுார்: ஓமலுார் அருகே காமலாபுரம் செல்லும் வழியில் தனியார் மதுக்-கடை உள்ளது. அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், 34, நடத்-துகிறார். அங்கு நேற்று மதியம், ஜெயப்பிரகாஷின் தம்பி ஜெய்ஹிந்த் இருந்தார். அப்போது அங்கு வந்த, காமலாபுரத்தை சேர்ந்த அருண்குமார், 32, என்பவருக்கும், ஜெய்ஹிந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர். இதை அறிந்து, ஜெயப்பிரகாஷ், அவரது தந்தை ராஜா, 60, வந்து சமாதா-னப்படுத்தினர். அப்போது ராஜாவுக்கும், அருண்குமாருக்கும் காயம் ஏற்பட்டது. உடனே பாரை உட்பக்கம் பூட்டிவிட்டு, ஓமலுார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 40,000 ரூபாய் மதிப்பில் பொருட்கள் சேதமாகின. போலீசார் வந்து விசாரித்-தனர். ராஜா, ஜெய்ஹிந்த், ஜெயப்பிரகாஷ், அருண்குமார், மருத்து-வமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பிலும் வழக்-குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ