மேலும் செய்திகள்
'குட்கா' வைத்திருந்த இரண்டு பேர் கைது
26-Aug-2024
இடைப்பாடி: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, பூனாச்சியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 38. தண்ணீர்தாசனுாரில் மளிகை கடை வைத்திருந்தார். நேற்று கோனேரிப்பட்டியில் இருந்து தண்ணீர்தாசனுாருக்கு, 'ஜென்' காரில் மளிகை பொருட்களை ஏற்றி சென்றுகொண்டிருந்தார். மாலை, 6:40 மணிக்கு கரியானுார் பரிவு அருகே சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், அப்பகுதியில் சாலையோரம் இருந்த பாலத்தின் மீது மோதியது. இதில் கார்த்திகேயன், சம்பவ இடத்தில் பலியானார். தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Aug-2024