உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாலத்தில் கார் மோதி மளிகை கடைக்காரர் பலி

பாலத்தில் கார் மோதி மளிகை கடைக்காரர் பலி

இடைப்பாடி: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, பூனாச்சியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 38. தண்ணீர்தாசனுாரில் மளிகை கடை வைத்திருந்தார். நேற்று கோனேரிப்பட்டியில் இருந்து தண்ணீர்தாசனுாருக்கு, 'ஜென்' காரில் மளிகை பொருட்களை ஏற்றி சென்றுகொண்டிருந்தார். மாலை, 6:40 மணிக்கு கரியானுார் பரிவு அருகே சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், அப்பகுதியில் சாலையோரம் இருந்த பாலத்தின் மீது மோதியது. இதில் கார்த்திகேயன், சம்பவ இடத்தில் பலியானார். தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ