கார், ரூ.4 லட்சத்தை ஒப்படைக்காத முன்னாள் மேலாளர் மீது வழக்கு
சேலம்: சேலம், நெத்திமேடு, புத்துார் இட்டேரி சாலையில், பிரிசம் கிராப் சைன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பூச்சிக்கொல்லி - இடுபொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. அங்கு, கோவை வசந்தம் நகரை சேர்ந்த ஜெகன்மோகன் ராவ், 5 ஆண்டுகளுக்கு மேலாக, மண்டல மேலாளராக பணிபுரிந்தார். பின், வேலையை ராஜினாமா செய்த அவர் மீது, நிறுவன கோட்ட மேலாளர் மாரி-முத்துவேல், கடந்த, 20ல், சேலம், அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.அதில் 'ஜெகன்மோகன்ராவ், நிறுவனத்துக்கு சொந்தமான நியோ கார், மடிக்கணினி, வசூல் பணம், 4 லட்சம் ரூபாயை, ஓராண்-டுக்கு மேலாகியும் ஒப்படைக்கவில்லை. அதன் மொத்த மதிப்பு, 9.10 லட்சம் ரூபாய்' என குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக, ஏமாற்றுதல், நஷ்டம் ஏற்படுத்தல், மோசடி, கொலை மிரட்டல் பிரிவுகளில், ஜெகன் மோகன்ராவ் மீது, போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.