உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் பு.பா.க.,வினர் மீது வழக்கு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் பு.பா.க.,வினர் மீது வழக்கு

ஓமலுார்: புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ய போலீசார் முயற்சிப்பதாக கூறி, சேலம் மாவட்டம் ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே, அக்கட்சியினர், சேலம் வடக்கு மாவட்ட தலைவர் நல்லதம்பி தலைமையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து சாலை மறியலுக்கு முயன்றதால், அவர்களை, ஓமலுார் போலீசார் தடுத்தனர். இந்நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தி, மக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, நல்லதம்பி உள்பட, 11 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ