உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சமையலறையில் இருந்த நாகப்பாம்பு மீட்பு

சமையலறையில் இருந்த நாகப்பாம்பு மீட்பு

ஆத்துார்: வீட்டு சமையல் அறையில் இருந்த நாகப் பாம்பை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். தலைவாசல் அருகே, சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜி மகன் ஈஸ்வரன், 40. இவரது வீட்டினுள் நேற்று, பாம்பு இருப்பதாக ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு மாலை, 4:00 மணிக்கு தகவல் அளித்தனர். உடனே சென்ற தீயணைப்பு வீரர்கள், பாம்பு பிடிக்கும் கருவி உதவியுடன், சமையல் அறையினுள் இருந்த ஐந்து அடி நீளம் கொண்ட நாகப் பாம்பை மீட்டனர். பின்னர், ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி