கல்லுாரி மாணவி மாயம்
சேலம், சேலம், அஸ்தம்பட்டி, சுப்ரமணியபரம் எக்ஸ்டென்ஸன் பகுதியை சேர்ந்த, நாகப்பன் மகள் ஷாலினி, 22. சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு எம்.பி.ஏ., படிக்கிறார். கடந்த, 22ல் கல்லுாரி சென்ற அவர், வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், பெற்றோர் அளித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் தேடுகின்றனர்.