மேலும் செய்திகள்
தேசிய கூடைப்பந்து போட்டி தமிழக அணி இரண்டாமிடம்
23-Nov-2024
சேலம்: பள்ளி கல்வித்துறை சார்பில், 14 வயதுக்கு உட்பட்டோர் கைப்-பந்து போட்டி நடத்தப்பட்டது. அதில், சேலம், அரிசிபாளையம் புனித மரியன்னை பள்ளி மாணவி தேன்மொழி, தமிழக அணிக்கு தேர்வானார். இதன்-மூலம் டிச., 10ல், உத்தரபிரதேசம், வாரணாசியில் நடக்க உள்ள தேசிய போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ளார். இதனால் அந்த மாணவிக்கு, சேலத்தில், மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் பாராட்டு விழா நேற்று நடந்தது. அதற்கு தலைமை வகித்து, சங்க தலைவர் ராஜ்குமார், மாணவியை பாராட்டினார். செயலர் சண்முகவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
23-Nov-2024