சாராயம் விற்பனை; மாற்றுத்திறனாளி கைது
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசார் நேற்று, கடம்பூர், க.ராமநாதபுரத்தில், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சொரிப்பாறை பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த, மாற்றுத்திறனாளி சண்முகம், 45, ஊறல் போட்டு சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. 50 லிட்டர் ஊறலை அழித்த போலீசார், அவரிடம் கேனில் இருந்த, 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின், அவரை கைது செய்தனர்.