உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் மீது கார் மோதி முதியவர் பலி

மொபட் மீது கார் மோதி முதியவர் பலி

ஆத்துார், ஆத்துார், செல்லியம்பாளையம், ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம், 80. கயிறு திரிக்கும் தொழில் செய்து வந்தார்.நேற்று காலை, 10:00 மணிக்கு, கொத்தாம்பாடியில் இருந்து, 'டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்.,' மொபட்டில், ஹெல்மெட் அணியாமல், செல்லியம்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.பழனியாபுரி பிரிவு சாலையை கடக்க முயன்றபோது, சேலத்தில் இருந்து ஆத்துார் நோக்கிச்சென்ற, 'ஸ்விப்ட்' கார், மொபட் மீது மோதியது. இதில் மாணிக்கம், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை