மொபட் மீது கார் மோதி முதியவர் உயிரிழப்பு
ஆத்துார்: ஆத்துார் அருகே பழனியாபுரியை சேர்ந்தவர் செல்லமுத்து, 75. நேற்று காலை, 11:30 மணிக்கு கொத்தாம்பாடியில் இருந்து பழனியாபுரி செல்ல, ஹெல்மெட் அணியாமல், 'எக்ஸ்.எல்.,' மொபட்டில் வந்து கொண்டிருந்தார். பழனியாபுரி பிரிவு சாலையில் திரும்பியபோது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற, 'டைசர்' கார், மொபட் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட பழனிமுத்து, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காரை விட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.