மேலும் செய்திகள்
நாளை குறை தீர்க்கும் கூட்டம்
26-May-2025
இடைப்பாடி, இடைப்பாடியில், நாளை (ஜூன் 4) மின்வாரிய பயனாளர்களின் குறைதீர் கூட்டம் நடக்கிறது.இது குறித்து, இடைப்பாடி மின்வாரிய கோட்ட பொறியாளர் தமிழ்மணி வெளியிட்டு அறிக்கை:இடைப்பாடி கோட்ட மின் வாரியம் சார்பில், மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் கோட்ட மின்வாரிய அலுவலக வளாகத்தில் நாளை பகல் 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் தாரணி தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் இடைப்பாடி, ஜலகண்டாபுரம், சித்துார், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இடைப்பாடி மின் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள், மின்சாரம் சம்மந்தமான குறைகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
26-May-2025