உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் மின் கோட்ட அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை (18) காலை, 11:00 மணிக்கு நடைபெற உள்ளது. மேட்டூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை வகிக்க உள்ளார். இதில் ஓமலுார் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.* சேலம் அன்னதானபட்டியில் உள்ள மேற்கு மின் கோட்ட அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை (18) பிற்பகல், 3:00 மணிக்கு நடைபெற உள்ளது. மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு தலைமை வகிக்க உள்ளார். இதில், மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை, செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ