தி காவேரி பொறியியல் கல்லுாரியில் தொழில் முனைவோர் திறன் பயிற்சி
மேச்சேரி: மேச்சேரி, தி காவேரி பொறியியல் கல்லுாரியில் வேளாண் பொறி-யியல் துறை மற்றும் இன்ஸ்டிடியூட் இன்னோவேஷன் கவுன்சில் சார்பில், 'நவீனத்துவம் மற்றும் தொழில் முனைவோர் திறன்' தலைப்பில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடந்தது. முதல்வர் துரை-சாமி தலைமை வகித்தார்.சேலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வாழ்ந்து காட்டு வோம் திட்டம், இளம் தொழில் முனைவோர் கயல்விழி, மாண-வர் களுக்கு பல்வேறு ஆலோசனைகள், சிறந்த பரிந்துரைகளை வழங்கி இளம் தொழில் முனைவோர் குறித்து விரிவான விளக்கம் அளித்தார்.முன்னதாக வேளாண் பொறியியல் துறை தலைவர் ஞானசுந்தர் பேசினார். கவுரவ தலைவர் நடேசன், தலைவர் அன்பழகன், துணைத்த-லைவர் மதன் கார்த்திக், செயலர் இளங்கோவன், தாளாளர் ராம-நாதன், ஒருங்கிணைப்பாளர் ரேவதி, முதன்மை செயல் அலுவலர் சண்முகநாதன், செயல் அலுவலர் கருப்பண்ணன், பேராசிரியை வித்யா, உதவி பேராசிரியர் அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.