பட்டாசு குடோனில் தீ விபத்து; பணியாளர் ஒருவர் பலி
ஆத்தூர்: சேலம் அருகே அயோத்தியாபட்டணம், பருத்திக்காடு பகுதியில் ஜெயக்குமார் என்பவர் பட்டாசு குடோன் வைத்துள்ளார். இன்று (செப்.,4) காலை திடீரென பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணியாளர் ஒருவர் உடல் கருகி பலியானார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.