ரூ.2.80 கோடிக்கு ஆடுகள் விற்பனை
இடைப்பாடி;கொங்கணாபுரம் ஆட்டுச்சந்தை நேற்று கூடியது. 2,600 ஆடுகளை, விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்தனர். 10 கிலோ வெள்ளாடு, 9,400 முதல், 9,800 ரூபாய் வரையும், செம்மறியாடு, 8,900 முதல், 9,300 ரூபாய் வரையும் விலைபோனது. 2,600 ஆடுகள் மூலம், 2.80 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம், 150 ஆடுகள் அதிகமாக கொண்டுவரப்பட்டிருந்தன.