மேலும் செய்திகள்
ஆடு திருடர்கள் கைது
17-May-2025
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பின்புறத்தில் கரடு உள்-ளது. மழை காலங்களில், கரட்டில் இருந்து வரும் மழை நீர், தனியார் விவசாய நிலத்தில் தேங்குகிறது. இதனால் அந்த நிலத்தில் பயிர் சாகுபடி பாதிக்கப்படுகிறது. கரட்டில் இருந்து வரும் மழை நீர், நத்தமேடு ஏரியை அடைய, ஏரி அடிக்கரை சாலையின் அடியில், சிறு பாலம் இருந்தது. அந்த பாலம் மற்றும் கால்வாய், மண்மூடி கிடக்கிறது. அதனால் ஏரிக்கு மழைநீர் செல்-லாமல், விவசாய வயலில் தேங்கி வீணாகிறது. மழைநீர் கால்வாய் மற்றும் பாலத்தை மீட்டு துார்வாரி சீரமைக்க, விவசா-யிகள் வலியுறுத்தினர்.
17-May-2025