கல்லால் தாக்கி நகைக்கடை ஓனர் கொலை
காரிப்பட்டி, கல்லால் தாக்கப்பட்டு, நகைக்கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த சுக்கம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 35. உடையாப்பட்டியில் நகை கடை வைத்திருந்தார். இவருக்கு மனைவி நித்யா, 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். நேற்று மதியம், 3:00 மணிக்கு, குள்ளம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, ரமேஷ் மது அருந்திக்கொண்டிருந்த நிலையில், மர்ம நபரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறியதாவது: ரமேஷ், நண்பருடன் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது நண்பர், அருகே சென்றுவிட்டு திரும்பியபோது, கல்லால் தாக்கப்பட்ட நிலையில், ரமேஷ் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவர், ரமே ைஷ மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மின்னாம்பள்ளியை சேர்ந்த புருேஷாத்தன், 45, என்பவரிடம் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.