அங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்
கெங்கவல்லி: கெங்கவல்லி பருவதராஜகுல தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது. இதற்கு பல்வேறு நதிகளில் இருந்து எடுத்து வந்த தண்ணீரை, யாக சாலையில் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள், புனித நீர் கலசத்தை மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி ஊர்வலமாக, கோபுர கலசத்துக்கு எடுத்துச்சென்றனர். தொடர்ந்து கலசம் மீது புனித நீரை ஊற்றி சிவாச்சாரியர்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின் மூலவர் அங்காளபரமேஸ்வரிக்கு தீபாராதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.