உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குறிஞ்சி பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அபாரம்

குறிஞ்சி பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அபாரம்

நாமக்கல், நாமக்கல், காவேட்டிப்பட்டியில், 25 ஆண்டுகளுக்கு மேலாக குறிஞ்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. 2024- 25ம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.இதில் அறிவியல் பாடப்பிரிவில் மாணவன் சக்தி, 593 மதிப்பெண்கள், ஆல்பினஸ் ரூவஸ், 591 மதிப்பெண்கள், மாணவி இனியா, 589 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.இயற்பியலில், 9 பேர், வேதியியலில், 7 பேர், உயிரியலில், 3 பேர், கணிதத்தில், 6 பேர், கணினி அறிவியலில் ஒருவர், 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 590 மதிப்பெண்களுக்கு மேல் இருவரும், 585 மதிப்பெண்களுக்கு மேல், 8 பேரும், 580 மதிப்பெண்களுக்கு மேல், 23 பேரும், 570 மதிப்பெண்களுக்கு மேல், 29 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல், 42 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 298 மதிப்பெண் பெற்ற உமா மகேஷ் என்ற மாணவனை, பிளஸ் 2 தேர்வில் 547 மதிப்பெண் பெற வைத்துள்ளனர்.இவர்களுக்கு பள்ளி தாளாளர் தங்கவேல் இனிப்பு வழங்கி பாராட்டினார். பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டினர். அட்மிஷன் தொடர்புக்கு 93445 67484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை