ஆத்தூர் அருகே கல்வராயன் மலையில் நிலச்சரிவு
ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் - சடையம்பட்டி வழியாக சாலை செல்கிறது. இந்த சாலையில் தொடர் மழையின் காரணமாக, மண் சரிவு ஏற்பட்டு பெரிய பாறை கற்கள் சாலைகளில் விழுந்துள்ளது. இதனால், அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலைகள் சேதம் அடைந்துள்ளது. இவ்வழிப்பாதை பயன்படுத்தும் மலை கிராம மக்கள், ஆத்தூர் பகுதிக்கு வர முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.