ரூ.3.10 கோடிக்கு கால்நடை விற்பனை
தலைவாசல்: தலைவாசல் அருகே, வீரகனுார் ஆட்டுச்சந்தை நேற்று கூடியது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 2,000 ஆடுகள், 1,000 மாடு-களை, ஏராளமானோர் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதில், 2,000 ஆடுகள் மூலம், 1.60 கோடி ரூபாய்க்கும், 1,000 மாடுகள் மூலம், 1.50 கோடி ரூபாய்க்கும் விற்பனை நடந்தது.