மேலும் செய்திகள்
கூத்தையன், மாரியம்மன் தேர் திருவிழா கோலாகலம்
29-May-2025
ஆத்துார், ஆத்துார், கல்பகனுார் ஊராட்சி சிவகங்கைபுரத்தில் உள்ள மகா மாரியம்மன், விநாயகர் கோவிலில், வைகாசி திருவிழா கடந்த, 3ல், பூப்போடுதலுடன் தொடங்கியது. 10ல் பால் குடம் எடுத்தல், சக்தி அழைத்தல் நடந்தது. நேற்று, 20 அடி உயர தேரில், மகா மாரியம்மன் சுவாமியை வைத்து, பூஜை செய்தனர். மாலை, 4:00 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியே தேரை இழுத்துச்சென்றனர். மாலை, 6:30 மணிக்கு, தேர் கோவிலை அடைந்தது. தொடர்ந்து பக்தர்கள் வழிபட்டனர்.
29-May-2025